அடுத்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் சர் சமர்ப்பிப்பு!

Monday, October 9th, 2017

வரும் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்ன நாடாளுன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

வரவு செலவு திட்டம் முன்வைப்புக்கு முன்னதாக, அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடு இந்த சட்டமூலத்தின் ஊடாக கோரப்படும். நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் அரச செலவீனம் 3982 பில்லியன் ரூபாய் ஆகவும் அரச வருமானம் ஏறக்குறைய 2175 பில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, தேசிய பாதுகாப்பிற்காக, 29 ஆயிரத்து 71 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த படியாக நிதி மற்றும் ஊடக அமைச்சிற்கு 22 ஆயிரத்து 757 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சிற்கு 10 ஆயிரத்து 288 கோடி ரூபாய்கள் ஒதுக்கிடப்பட்டுள்ளன. இதேவேளை, சுகாதார அமைச்சிற்கு 17 ஆயிரத்து 839 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கான எந்த திட்டமும் இல்லை என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

மக்களின் மனதை வென்றெ இராணுவ அதிகாரி - பிரியாவிடை நிகழ்வில் கண்ணீருடன் விடைகொடுத்த மக்கள்!
பொதுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்தும் போதும் தடுப்பூசி ஏற்றிய அட்டை வைத்திருப்பது கட்டாயமாக்குவது த...
மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பை நிதி அமைச்சால் கட்டுப்படுத்த முடியாது - நிதி இராஜாங்க அமை...

அதிகரித்து வரும் முச்சக்கர வண்டி - உந்துருளி கடத்தல்கள் – பொதுமக்களை எச்சரிக்கும் பொலிஸ் ஊடகப் பேச்ச...
ஆசிரியர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் பத்து நாட்களுக்குள் பூர்த்தி – கல்வி அமைச்சர் தெரிவ...
வடக்கில் 639 பாடசாலைகள் இன்று ஆரம்பம் – கல்வி நடவடிக்கை மீண்டும் ஆரம்பித்துள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாக...