கட்டாக் காலிகளால் அழிவடையும் நெற்பயிர்கள்!
Thursday, October 5th, 2017
நவாலி வடக்கு, தெற்கு விவசாயக் காணிகளில் கட்டாக்காலி மாடுகளால் அழிவு ஏற்படுவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தற்போது நெற்பயிர்கள் இரண்டு மூன்று இலைகள் துளிர்விட்டுள்ள நிலையில் கட்டாக்காலி மாடுகள் அங்கு மேய வருவதால் அழிவு ஏற்படுகின்றது.
“மாடுகளை மேய விட வேண்டாம், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என ஒலிபெருக்கி மூலம் அறிவித்த நிலையிலும் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை காணப்படுகின்றதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
Related posts:
பரீட்சைத் திணைக்களத்தின் பிரச்சினைக்கு காரணம் என்ன?
உடலங்களை அடக்கம் செய்வது தொடர்பான புதிய வழிகாட்டல் அடுத்தவாரம் வெளிவிடப்படும் - என சுகாதார சேவைகள் ப...
ஊர்காவற்துறை மற்றும் தெல்லிப்பழை வைத்தியசாலைகளின் கட்டட தேவைப்பாடுகளுக்கு இவ்வாண்டில் முன்னுரிமை – வ...
|
|
|


