பொலிஸாருக்க தரமான சீருடை – அமைச்சர் சாகல ரத்னாயக்க!
Thursday, September 28th, 2017
பொலிஸாரின் சீருடை, தொப்பி, மற்றும் பாதணிகளை உரிய தரத்துடன் வழங்குவதற்காக ஒரு மாத காலத்திற்குள் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் சாகல ரத்னாயக்க துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
பொலிஸ் சீருடையின் மாதிரிகளை கண்காணித்ததன் பின்னர் சட்ட ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க நேற்று இந்தப் பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.பொலிஸ்மா அதிபர் முதல் கான்ஸ்டபிள் வரை அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் ஒரேவிதமான துணியைப் பயன்படுத்துமாறும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சீருடைகளைத் தைக்கும் பணிகள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ்மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மேலும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ் பொதுநூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவு!
நாட்டின் தலைவர் நாட்டு மக்களால், தெரிவு செய்யப்பட வேண்டுமே அன்றி 225 பேரால் அல்ல - அமைச்சர் ரொஷான் ...
நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிய படையினருக்கும் ஜனாதிபதி அழைப்பு!
|
|
|


