சிகிச்சை பெற்றுவரும் வடக்கு முதல்வரை பார்வையிட்டார் டக்ளஸ் தேவானந்தா!
Wednesday, September 27th, 2017
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டதுடன் சுகநலம் தொடர்பிலும் கேட்றிந்துகொண்டார்.
யாழ் போதனா வைத்தியசாலைக்கு இன்றையதினம்(27) விஜயம் மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா வடக்கு மாகாண முதல்வரை பார்வையிட்டார்.
நேற்றுமுன்தினம் சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் விக்னேஸ்வரன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையியேலயே டக்ளஸ் தேவானந்தா வைத்தியசாலைக்கு சென்று அவரது சுகநலம் தொடர்பாக அக்கறையுடன் கேட்டறிந்துகொண்டார். இதன்போது முதல்வரும் தமது சுகநலம் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவிடம் எடுத்தரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இறால் அறுவடையே எமக்கு வாழ்வாதாரமாக உள்ளது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பயனாளிகள் நன்றி தெரிவிப்...
தொடரும் சீரற்ற காலநிலை - கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் விழிப்புணர்வுகளை தொடர்ச்சியாக முன்னெ...
வாழ்வாதாரத்தினை வலுப்படுத்தும் வகையில் ஊர்காவற்துறை, வேலணை மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால...
|
|
|


