நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

Wednesday, September 20th, 2017

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் எட்டுத் தமிழக மீனவர்கள் நேற்று (19) அதிகாலை யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு விசைப்படகுகளும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட எட்டு மீனவர்களும்  நேற்றுப் பிற்பகல் கடற்படையினரால் யாழ். நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் றியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும்-25 ஆம் திகதி வரை குறித்த மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக யாழ். மாவட்ட நீரியல் வளத் திணைக்கள உதவிப்பணிப்பாளர் ஜே.சுதாகர் தெரிவித்துள்ளார்.

Related posts:

அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சிகள் இணக்கம் – ஜனாதிபதி ரணில் வ...
அபிவிருத்தியின் வெற்றி அனைவருக்குமானதே - அரசியல் பேதங்களுக்கு அப்பால் செயற்படுவோம் என பிரதமர் தினேஷ்...
அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 55,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவி...