மின்சார சபை அதிரடி: மூவாயிரம் ஊழியர்களை பணி நீக்க தீர்மானம்!
Wednesday, September 20th, 2017
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மூவாயிரம் ஊழியர்களை பணி நீக்குவதற்கு மின்சார சபை தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்காலிக அடிப்படையில் கடமையாற்றும் சிற்றூழியர்கள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் பண அறவீட்டாளர்கள் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்படவுள்ளனர்.வேலைநிறுத்தம் காரணமாக கடமைக்கு வராத அவர்களை பணியிலிருந்து தாமாக விலகிக் கொண்டவர்களாக தீர்மானித்து செயலாற்ற மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அது தொடர்பான அறிவித்தல் கடிதம் அனைவருக்கும் அனுப்பப்பட்டு வருவதாக மின்சார சபையின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அவ்வாறு விலக்கப்படும் ஊழியர்களுக்குப் பதிலாக புதிய ஊழியர்கள் விரைவில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் மின்சார சபை நிர்வாகம் அறிவித்துள்ளது.
Related posts:
மே முதலாம் திகதி முதல் நிலத்தடி நீர் பாவனைக்கு கட்டுப்பாடு !
பாகுபாடுகள் வேண்டாம்: சட்டம் அனைவருக்கும் சமமானது - யாழ் மாநகரசபையில் ஈ.பி.டி.பி வலியுறுத்து!
ஜனாதிபதி கோட்டாபய ஆட்சியை பொறுப்பேற்ற பின் கண்ணீர் புகை, தடியடி தாக்குதல் இடம்பெற்றதாக வரலாறு இல்லை ...
|
|
|
20 ஆவது திருத்த்திலுள்ள அரசியலமைப்புக்கு முரணாக விடயங்கள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டு...
சீரற்ற காலநிலை - நாடு முழுவதும் 2 ஆயிரத்து 750 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரத்து 542 பேர் பா...
பொருளாதார ரீதியில் ஆபத்தான நிலையில் இருந்து நாடு இன்னும் மீளவில்லை - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் ச...


