சரத் பொன்சேகா கைதுசெய்யுங்கள் – தாய்நாட்டிற்கான படையினர் அமைப்பு வலியுறுத்து!

Saturday, September 16th, 2017

பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக இருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்று தாய்நாட்டிற்கான படையினர் அமைப்பு அரசாங்கத்திடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது.

இறுதிக்கட்டப் போரின் போது யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றதாக கூறியுள்ளது மாத்திரமன்றி அவை தொடர்பில் சாட்சியமளிக்கவும் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளதாலேயே தாம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது

Related posts:


கொழும்பு துறைமுக மேற்கு முனையம் இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி!
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 9 ஆயிரம் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் – பிரதமரினால் மக்கள் வ...
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம் அடுத்த சில வாரங்களில் இந்திய மற்றும் ரஸ்ய நிறுவனங்களுக்கு ...