தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் ? தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!
Thursday, May 19th, 2016
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும் தமழக சட்டதமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை தவிர 232 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்ப திவு கடந்த 16-ஆம் திகதி நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு இயந்திரங்கள் சீலிடப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 68 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பிற்பகலுக்குள் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியாகும் என கூறப்படுகிறது.
Related posts:
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி வெளியானது!
அமெரிக்கா தவறிழைத்துவிட்டது - ஈரானின் உயர் தலைவர்!
நீண்ட நாட்களுக்கு பின் அமெரிக்காவில் பெருமளவு குறைந்த பலி எண்ணிக்கை!
|
|
|


