அரிசியின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா? நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி கேள்வி

Wednesday, September 6th, 2017

பல வர்த்தக்கர்கள் உள்@ர் அரிசி வகைகளுடன் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வகைகளைக் கலப்படம்  செய்து, விற்கும் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கும் பொது மக்கள், அரிசி வகைகளின் அதிகரித்துள்ள விலைகள் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே  எமது நாட்டு மக்களின் அத்தியவசியமான உணவுப் பொருளான அரிசிக்கு குறிப்பிட்டதொரு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து, அதனை தொடர்ந்து அமுல்படுத்துவதில் ஏதேனும் தடைகள் உள்ளனவா? என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்த்தில் கேள்வி எழுப்பினார்.

அரிசியின் விலை கட்டுப்பாடற்று இருப்பதால் அவ்விடயத்தில் தீர்வொன்றை மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கான கேள்விகளை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இன்று(06.09.2017) நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். இவ்விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்றவகையில், கைத்தொழில் அபிவிருத்தி, வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் கௌரவ ரிசாட் பதூர்தீனிடம் கேள்விகளை முன்வைத்து உரையாற்றியபோது,

உள்@ர் மற்றும் இறக்குமதி அரிசி வகைகளுக்கு இதுகால வரையிலும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் அண்மையில் நீக்கியதையடுத்து, நாட்டில் வடக்கு மாகாணம் உட்பட பல்வேறு பகுதிகளில் அரிசி வகைகளின் சில்லறை விலைகள் அதிகரித்துள்ளதாக மக்கள் தொடர்ந்து முறைப்பாடுகளை முன்வைத்து வருகின்றனர்.

பல வர்த்தக்கர்கள் உள்@ர் அரிசி வகைகளுடன் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வகைகளைக் கலப்படம்  செய்து, விற்கும் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கும் பொது மக்கள், அரிசி வகைகளின் அதிகரித்துள்ள விலைகள் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், கடந்த காலங்களில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் மூலமாக கட்டுப்பாட்டு விலைகளில் அரிசி விற்பனை செய்து வரப்பட்டுள்ள நிலையில், தற்போது கூட்டுறவுச் சங்கங்கள் செயலிழந்து, அதிகமான கிளைகள் மூடப்பட்டுள்ளதால் தனியார் வர்த்தக நிலையங்களில் அதிக விலை கொடுத்தே அரிசியை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக எமது பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எமது நாட்டு மக்களின் அத்தியவசியமான உணவுப் பொருளான அரிசிக்கு குறிப்பிட்டதொரு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து, அதனை தொடர்ந்து அமுல்படுத்துவதில் ஏதேனும் தடைகள் உள்ளனவா? என்றும், பொது மக்கள் நியாயமான விலையில் அரிசியைப் கொள்வனவு செய்து கொள்வதற்கான வழிவகைகள் யாது? என்றும், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களின் மூலமாக விநியோகிக்கப்படுகின்ற அரிசி வகைகளுக்கு என நிர்ணயிக்கப்பட்ட ஏதேனும் விலைகள் உள்ளனவா? என்றும் கேள்விகளை முன்வைத்ததுடன், தொடர்ந்தும் கேள்வி எழுப்பிய செயலாளர் நாயகம் அவர்கள்,

வடக்கு மாகாணத்தில் பலநோக்குக் கூட்டுறவு சங்கங்களை நவீனப்படுத்தி, பலப்படுத்தும் நோக்கில் தங்களது அமைச்சிடம் ஏதேனும் திட்டங்கள் உள்ளனவா? என்றும், இறக்குமதி செய்யப்படுகின்ற அரிசியை, உள்@ர் அரிசி ஆலைகளில், உள்@ர் அரிசி என்ற பெயரில் பொதி செய்யப்பட்டு, சந்தைக்கு விடப்படுவதாக பொது மக்கள் மத்தியில் நிலவும் கருத்தில் உண்மையுள்ளதா? என்றும், அரிசியில் கலப்படும் செய்கின்ற வர்த்தகர்கள் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை உரிய சோதனைகளை மேற்கொண்டு வருகின்றதா? என்றும் கேள்வி எழுப்பியதுடன், தனது கேள்விகளுக்கான பதிலையும், அதற்காக அமைச்சரால் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளையும் அமைச்சர் ரிசாட் பதூர்தீன் அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன் என்றும் தெரிவித்தார்.

Related posts:

யாழ் குடாநாட்டில் இடம்பெற்றுவரும் சமூக விரோத செயற்பாடுகளுக்கு யார் காரணம்? அரசியல் தொடர்புகள் உண்ட...
வன்னேரிக்குளம் பகுதியில் நெற் களஞ்சியசாலை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க முடியுமா? - நாடாளுமன்றில் டக...
இலங்கை உயர்கல்வி முறைமை பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு துரோகம் இழைக்கின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் ...

இரணைத்தீவு மக்களை மீளக்குடியேற்றுவதற்கு சட்ட ரீதியிலான அனுமதி எப்போது வழங்கப்படும்?  - நாடாளுமன்றில்...
முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்சவீடு அமைக்க எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?...
மானிய அடிப்படையில் விதை உருளைக் கிழங்கு வழங்க நடவடிக்கை எடுக்க முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்....