டிசம்பர் மாதத்திற்கு முன் உள்ளூராட்சி தேர்தல்: நிறைவேறியது சட்டமூலம்!
Friday, August 25th, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் 120 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைத்துள்ள அதேவேளை, 44 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளமையால் இவ்வருடத்தின் இறுதிக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையெ வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி கல்விப்பொததராதர சாதாரணதரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதால் அதற்கு முன்னர் தேர்தலை நடத்த வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
சர்ச்சைக்குரிய கண்புரை சத்திரகிசிச்சை விவகாரம் - இந்தியாவிடம் இழப்பீடு கோரியது இலங்கை!
கடமையில் ஈடுபடும் பொலிசாரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாகனத்தை செலுத்துமாறு வானக சாரதிகளிடம...
டிஜிட்டல் பிரிவினை - அழிவுக்கு வழிவகுக்கும் ஆயுதங்கள் - உலக நாடுகள் மத்தியில் பெரும் சமநிலை அற்ற தன்...
|
|
|


