மனித உரிமைகள் தொடர்பில் கூடுதல் அக்கறை வேண்டும் – அமைச்சர் திலக் மாரப்பன!
Saturday, August 19th, 2017
மனித உரிமைகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளிலேயே கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியிருப்பதாக புதிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நேற்று தெரிவித்துள்ளார்.
புதிய வெளிவிவகார அமைச்சராக தனது கடமைகளை நேற்றுப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். “எமது நாட்டுக்கு முதலீடும் சுற்றுலாப் பயணிகளும் அவசியம் என்றால் மனித உரிமைகள் விடயத்தில் நாம் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். எமக்கு அனைத்து நாடுகளுடனும் நட்பான உறவே வேண்டும்.” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
“மிகவும் துரதிஷ்டவசமான சந்தர்ப்பத்திலேயே நான் இப்பதவியை பொறுப்பேற்கிறேன், என்றாலும் என்னால் இயன்ற ஆகக்கூடிய பொறுப்புக்களை நான் நிறைவேற்றுவேன் ” என்றும் அவர் தெரிவித்தார்.
Related posts:
குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாக கைதான 24 பேரிடமும் CID கடுமையான விசாரணை!
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய மாகாணசபைகளின் நிலைப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு முன்வதத்த ய...
அணுவாயுத யுகத்தின் விளிம்பில் உலகம் - பிரிட்டனின் ஆயுத படை தலைவர் எச்சரிக்கை!
|
|
|
அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் அரச பணியாளர்கள் மாத்திரம் கடமைக்கு - நிறுவன பிரதானியினால் பணியாளர...
வினாத்தாள்களை வெளியிட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை - பரீட்சைகள் ஆணையாளர் அதிரடி நடடிவக...
சமூகத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் - குழந்தைகள் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தச் சட்டத்தை உருவாக்க...


