உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் மனைவி பொலிஸ் சேவையில்!
Tuesday, August 15th, 2017
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் மெய்பாதுகாவலராக பணியாற்றிய நிலையில் கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கி பிரயோத்தில் பலியான காவல்துறை பரிசோதகரின் மனைவியை மீண்டும் காவல்துறையில் இணைத்துக் கொள்ள தேசிய காவல்துறை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அவரால் காவல்துறை மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மேன்முறையீடு குறித்து ஆராய்ந்ததன் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, அவரின் இல்லம் அமைந்துள்ள பிரதேசத்திற்கு அருகில் உள்ள காவல்துறை நிலையமான பள்ளம காவல்துறை நிலையத்தில் பணிப்புரிய நேற்று முதல் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
Related posts:
பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்க அரசு இணக்கம்!
சிறுவர் இல்லப் பிரச்சினைகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும்!
500 தூண்களுடன் புங்குடுதீவில் பிரமாண்டமாக கட்டப்பட்டது கோயில் - எதிர்வரும் 25 ஆம் திகதி மகா கும்பாபி...
|
|
|


