நோயாளர் காவுகை வாகனங்களுக்கு அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணங்களை அறவிடாதிருக்க யோசனை!
Wednesday, August 9th, 2017
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் நோயாளர் காவுகை வாகனங்களுக்கு கட்டணங்களை அறவிடாதிருப்பதற்கான யோசனை ஒன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நோயாளர் காவுகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது, அதற்கான கட்டணத்தை சுகாதார சேவையாளர்கள் வழங்க வேண்டிய நிலை காணப்படுகிறது.
இதுதொடர்பில் வைத்தியசாலைத் தரப்பினர், தமக்கு முன்வைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், இந்த யோசனையை கொண்டுவரவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அதிகரிக்கும் சிறுவர்கள் மீதான வன்முறை - ஆறு ஆண்டுகளில் 19 ஆயிரத்து 768 சம்பவங்கள் பதிவு - தேசிய சிறு...
பிரதமர் ரணில் பணிப்புரை - எதிர்வரும் ஜூன் மாதம்முதல் பிரதமர் அலுவலகத்தின் செலவீனங்களை50 சதவீதமாக குற...
கல்வி - சுகாதாரத்திற்காக அதிகளவிலான நிதியை ஒதுக்க திட்டம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!
|
|
|


