தனிப்பட்ட விரோதம் வாள்வெட்டில் முடிவடைந்தது: மானிப்பாயில் சம்பவம்
Monday, July 31st, 2017
மானிப்பாயில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இரு இளைஞர்கள் படுகாயங்களுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை( 30) மாலை இந்த வாள்வெட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, தனிப்பட்ட விரோதம் காரணமாக மானிப்பாய் லோட்டஸ் வீதியில் இரு இளைஞர் குழுக்கள் நேற்று மாலை வாள்களால் மோதிக் கொண்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் மோகன் தனுராஜ்(வயது- 22) மற்றும் விக்னராஜா ஜீவராஸ்(வயது- 22) ஆகிய இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
இலங்கையின் மின்சாரத்துறையை தனியார் மயமாக்க முயற்சி! தொழிற்சங்கங்கள் குற்றம்!!
பொன்னாலை மேற்குக்கு குழாய் மூலம் குடிதண்ணீர்!
இருதரப்பு ஒப்பந்தங்கள் பல கைச்சாத்து - பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் சீன அரசாங்கத்துடன் நெருக்கமாக...
|
|
|


