உலக வங்கியிடமிருந்து பத்து கோடி டொலர் கடன் உதவி!
Tuesday, July 18th, 2017
உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்திச் சங்கமும் சர்வதேச மீள் கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி வங்கியும் இணைந்து இலங்கையின் உயர் கல்வி மேம்பாட்டுக்கு உதவ முன்வந்துள்ளன.
இதற்hகா இவ்விரு நிறுவனங்கள் உயர் கல்வியை விஸ்தரித்துஇ அதனை துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கு பத்து கோடி அமெரிக்க டொலரை கடனாக வழங்க முன்வந்துள்ளன.
இதற்கானதொரு திட்டத்தை அமுலாக்குவது தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி கருதி உயர் கல்வித்துறையில் ஆட்சேர்ப்புக்களை அதிகரித்தல் உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்தல் ஆய்வு அபிவிருத்தி மற்றும் புதிய கண்டுபிடிப்புக்களை அதிகரித்தல் முதலான மூன்று விடயங்கள் பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
Related posts:
சூரியசக்தி மின்னுற்பத்தி பூங்காவினை ஸ்தாபிக்க அனுமதி!
உர மானியம் வழங்குவதற்காக 1500 மில்லியன் - அரசாங்கம்!
இலங்கையின் பொருளாதாரம் இவ்வருடம் வீழ்ச்சி காணும் - உலகவங்கி எச்சரிக்கை!
|
|
|


