பாடசாலை சீருடை வவுச்சரின் பெறுமதி அதிகரிப்பு!
Saturday, May 14th, 2016
பாடசாலை சீருடைக்கான வவுச்சர் பெறுமதியை மேலும் 100 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக கல்வி அமைச்சசர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் 400 ரூபாயாக இருந்த சீருடைக்கான வவுச்சரின் பெறுமதியை 500 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீருடைக்கான வவுச்சர் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து கோடிக்கணக்கான ரூபாய் பணம் மீதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் வவுச்சரின் பெறுமதி அதிகரிப்பதற்கு முடிந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சமூக ஊடங்கள் மீதான தடைக்கு 71.4 வீத மக்கள் ஆதரவு !
நிர்வாக நிறைவேற்று பொறுப்பிலிருப்பவர்களது அசமந்தம் மாநகருக்கு பெரும் அச்சுறுத்தல் – ஈ.பி.டி.பியின் ய...
அவதானமாக இருங்கள் - நெடுந்தீவு மக்களுக்கு வைத்திய அதிகாரிஅ அறிவுறுத்து!
|
|
|


