ஐ.தே.கட்சியின் எம்.பிக்கள் வெளிநாடு செல்ல தடை!
Friday, July 7th, 2017
வரவு செலவுத் திட்டம் முடியும் வரை வெளிநாட்டு பயணங்களை குறைத்து கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.
இந்த அறிவித்தலை நேற்று கடிதம் மூலம் கூறியுள்ளார். குறித்த காலப் பகுதியில் அத்தியவசியமான வெளிநாட்டுப் பயணங்கள் இருந்தால், அது மூன்று வாரங்களுக்கு முன்னர் அறிவிக்குமாறும் பிரதமர் கடிதத்தில் கூறியுள்ளார்.
குறித்த கடித்தை , அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வினைதிறனாகவும், முக்கியத்துவம் கொடுத்து நிறைவேற்றும் நோக்கிலும் அனுப்பியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ஒக்டோபரில் வாக்காளர் பெயர்ப் பட்டியல் உறுதிசெய்யப்படும்- மேலதிக தேர்தல் ஆணையாளர்!
பெப்ரவரி மாதத்திற்குள் மின்சாரத் தேவையை நிர்வகிக்க முடியும் - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்ப...
ஜனாதிபதி போட்டியாளர்கள் சொத்துக்களை பகிரங்கப்படுத்த வேண்டும் - இலங்கை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வல...
|
|
|


