இருபதுக்கு 20 போட்டிக்காக கிரிஸ் கெயில் மீண்டும் அணியில்!
Friday, July 7th, 2017
இந்திய அணியுடனான இருபதுக்கு இருபது போட்டிக்காக மேற்கிந்திய தீவுகள் அணியில் கிரிஸ் கெயில் இணைக்கப்பட்டுள்ளார். இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்சமயம் ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகின்றது.இந்த ஒருநாள் போட்டித் தொடர் நிறைவு பெற்றதும் ஒரே ஒரு இருபதுக்கு இருபது போட்டி இடம்பெறவுள்ளது
இந்தநிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் கெயில் அணியில் இணைந்துக் கொள்ளப்பட்டுள்ளார்.கெயிலின் வருகை அணியின் துடுப்பாட்டத்திற்கு வலு சேர்க்கும் என மேற்கிந்திய கிரிக்கெட் சபை தெரிவு குழு தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இரசிகர்களின் எதிர்பார்ப்புடன் முதல் போட்டியில் இலங்கை!
அவுஸ்திரேலியாவுக்கு செல்கிறது இலங்கை அணி !
அனைத்து இந்திய கால்பந்தாட்ட சம்மேளனத்தை பிஃபா இடைநீக்கியது!
|
|
|


