துருக்கிக்கு தடை நீக்கம்
Thursday, July 6th, 2017
அமெரிக்காவுக்கு வரும் வானூர்திகளில் மடிகணினி உள்ளிட்ட மின் உபகரணங்கள் கொண்டுச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையில் இருந்து துருக்கிக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நீக்கம் நேற்றுமுதல் நடைமுறைக்கு வருவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
ரித்தானியாவின் மன்செஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் ஏற்பட்ட தீவிரவாத அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, தமது நாட்டுக்கு வரும் வானூர்திகளில், மடிக்கணினிகள் உள்ளிட்ட மின் உபகரணங்களுக்கு தடை விதிக்க அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டது. மடிக்கணினிகளை பயன்படுத்தி தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ள முடியும் என, உளவு பிரிவு விடுத்த எச்சரிக்கையினை அடுத்து அந்த நடவடிக்கையை அமெரிக்கா மோற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ரோனு தாக்கி வங்கதேசத்தில் 17 பேர் பலி!
இலங்கை அகதிகளை நிராகரிக்கும் பிரித்தானியா!
எதியோப்பியாவின் புதிய பிரதமராக அபிய் அகமது தெரிவு!
|
|
|


