இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அஞ்சல் சேவையாளர்கள் ஒன்றியம் பணிப்புறக்கணிப்பு!
Monday, June 26th, 2017
அஞ்சல் சேவையாளர்கள் ஒன்றியம் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளது
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அஞ்சல் காரியாலயங்களை ஓய்வு விடுதிகளாக மாற்றும் செயற்திட்டத்திற்கு அனுதி வழங்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தல், நிர்வாக பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கு முன்னதாக குறித்த கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 12ஆம் திகதி அஞ்சல் சேவை பணியாளர்கள், 48 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்இந்த நிலையில் இது வரையில் அரச தரப்பு அதிகாரிகள் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முன்வரவில்லையென அஞ்சல் பணியாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது
Related posts:
மேலும் இரண்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவபீடங்கள்!
மது போதையில் வாகனம் செலுத்திய இளம் சட்டத்தரணி மீது பொலிஸார் வழக்கு!
அரசு அதிகாரிகள் ஓய்வு பெற்ற பிறகும் சொத்து பொறுப்பு அறிக்கையை வழங்குவது கட்டாயம் !
|
|
|


