பள்ளிவாசல் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல்.
Thursday, June 22nd, 2017
ஈராக்கின் மோசுல் நகரில் உள்ள முக்கிய பள்ளிவாசலான அல் நூரியை, ஐ.எஸ் தீவிரவாதிகள் வெடிவைத்து வீழ்த்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஈராக்கிய படையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் இந்த குற்றச்சாட்டை ஐ.எஸ்.தீவிரவாதிகள் மறுத்துள்ளனர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அமெரிக்காவின் வான்படையினர் நடத்திய தாக்குதலிலேயே இந்த பள்ளிவாசல் வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
எனினும். இந்த பள்ளிவாசல் வீழ்த்தப்பட்டமையானது, ஐ.எஸ். தீவிரவாதிகளின் தோல்வி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துக் காட்டுவதாக, ஈராக்கின் பிரதமர் ஹைட அல் அபாடி தெரிவித்துள்ளார்
இந்த குற்றச்செயலை ஐ.எஸ். தீவிரவாதிகள் புரியும் போது, தாங்கள் குறித்த பள்ளிவாசலில் இருந்து சில மீற்றர்களுக்கு அருகிலேயே இருந்ததாக ஈராக்கிய படையினர் கூறியுள்ளனர்
Related posts:
குஜராத் குல்பர்க் சொசைட்டி கலவரங்களில் ஈடுபட்ட 24 பேர் குற்றவாளிகள் -- நீதிமன்றம் தீர்ப்பு
சீனா டெலிகொம் நிறுவனத்தின் அனுமதி இரத்து ௲ தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என அமெரிக்கா அதிரடி நடவடிக்கை...
பிரான்சில் ஆட்சி கவிழ்ப்பு - பதவி விலகினார் பிரதமர்!
|
|
|


