சரணடைந்தார் ஞானசார தேரர்!
Wednesday, June 21st, 2017
கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் பிரசன்னமாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர் சட்டத்தரணி ஊடாக இவ்வாறு நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். தேசிய பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வட்டரக்க விஜித தேரரை மிரட்டியமை மற்றும் குரானை அவமதித்ததாக கூறப்படுகின்ற சம்பவம் தொடர்பிலும் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.எனினும் ஞானசார தேரர் இந்த வழக்கில் முன்னிலையாகாமை காரணமாக கடந்த 15 ஆம் திகதி அவரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பத்திரிகை ஊழியர்களை பணி நீக்கம் செய்த MICROSOFT நிறுவனம்!
உலகின் சிறந்த 2 வீத விஞ்ஞானிகளுள் இலங்கையர்கள்!
இலங்கையில் அணுமின் நிலையம் அமைக்க ரஷ்யா நடவடிக்கை - ஆராயும் சர்வதேச அணுசக்தி நிறுவனம்!
|
|
|


