இன்று யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி!
Monday, June 12th, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்றையதினம் வருகைதரவுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழுகூட்டம் இடம்பெறவுள்ள நிலையில், அதில் பங்குகொள்ளும் பொருட்டே ஜனாதிபதி யாழ்ப்பாணம் செல்கிறார். இந்த கூட்டம் யாழ்ப்பாண செயலகத்தில் பிற்பகல் இடம்பெறவுள்ளது
அதன்போது மாவட்டத்தில் அபிவிருத்தி மற்றும் மீளாய்வுகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளன இந்த கூட்டத்திற்கு மாகாணத்தின் சகல அரசாங்க அதிபர்களும், அதிகாரிகளும், பங்குகொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறதுஇதனிடையே, வடமாகாண ஆளுநரையும் ஜனாதிபதி சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
தஜிகிஸ்தான் கூடுதலான ஒத்துழைப்பை இலங்கையிடமிருந்து எதிர்பார்க்கின்றது!
அனைத்து பல்கலைகழகங்களும் நாளைமுதல் மீள திறக்கப்படும் - பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 577 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
|
|
|


