யாழில் றம்புட்டான் பழ வியாபாரம் மும்முரம்
Sunday, June 11th, 2017
றம்புட்டான் பழச் சீசன் ஆரம்பமாகியுள்ளதையடுத்து யாழ். மாவட்டத்தில் றம்புட்டான் பழ வியாபாரம் சூடு பிடித்துள்ளது.
யாழ். நகர்ப்புறப் பகுதி மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள், நல்லூர், திருநெல்வேலி, கொக்குவில், சுன்னாகம், மருதனார்மடம் உள்ளிட்ட பகுதிகளில் றம்புட்டான் பழ வியாபாரம் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் ஒரு றம்புட்டான் பழம் பத்து ரூபாவாக விற்பனையாகின்றன.
யாழில் கடும் வெப்பமுடனான காலநிலை நிலவி வரும் நிலையில் றம்புட்டான் பழங்களைக் கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
இம்மாத இறுதிக்குள் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் – பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!
அரச பணியாளர்கள் தங்களது பொறுப்புக்களை நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சரிவர நிறைவேற்ற வேண்டும் – ஜனா...
ஜனாதிபதி தேர்தல் - அஞ்சல் மூல வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று!
|
|
|


