பல்வேறு பகுதிகளில் இன்று மின்சார விநியோகத் தடை!
Saturday, June 10th, 2017
யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மின்சார விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்சாரவிநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளின் காரணமாக இந்த மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது
காலை 8.30 முதல் மாலை 5.30 வரை யாழ்ப்பாண மாவட்டத்தின் துரையப்பா விளையாட்டரங்கு, நுணாவில், கைதடி, நாவற்குழி, புன்னாலைக்கட்டுவன் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்படவுள்ளது
மேலும், பலாலி, மயிலிட்டி, பலாலி விமானப்படை முகாம், பலாலி இராணுவ முகாம், பலாலி விமானப்படை விடுதி மற்றும் கைதடி வடமாகாண சபை அலுவலகம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரவிநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது
Related posts:
நாட்டுக்குள் கடல் வழியாக போதைப் பொருள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தில் முப்படை...
இணைய வழி கடவுச்சீட்டு முறைமையில் 3 ஆயிரத்து 265 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் - குடிவரவு மற்றும் குடியக...
நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துபவர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படுவர் - அமைச்சர் மனுஷ நாணயக்...
|
|
|


