யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு இந்திய அரசாங்கத்தினால் நூல்கள்அன்பளிப்பு!
Monday, May 29th, 2017
யாழ்ப்பாணபொது நூலகத்திற்கு இந்தியஅரசாங்கத்தினால் 60 இலட்சம் ரூபாபெறு மதியான நூல்களை அன்பளிப்புச் செய்யவுள்ளது.நூல்களை இம்மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்துகையளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யாழ். பொது நூலகத்திற்கென இந்தியமக்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளசுமார் 16 ஆயிரம் நூல்கள் குறித்ததினத்தில் நன்கொடையாக வழங்கப்படவுள்ளன.
யாழ். பொது நூலகம் எரிக்கப்படுவதற்கு முன்னர் பல்வேறு நூல்கள் இருந்துள்ளதாகவும், மிகச் சிறந்த நூல் தொகுதிகள் உள்ளடக்கிய பழம்பெரும் நூலகமாகவிளங்கியுள்ளதால் , மிக அதிகமான நூல்கள் உள்ளடக் கப்படவேண்டும் என இந்தியத் துணைத் தூதுவரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக இந்த நூல்கள் அன்பளிப்புச் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மானிய முறையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை : அமைச்சர் அர்ஜுன ரணதுங்க!
தேர்தல் ஆணைக்குழுவிற்கு நிதிச்சுதந்திரம் அவசியமாகும் - பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ...
சட்டரீதியாக ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலியுறு...
|
|
|
நிலையான அரசாங்கம் விரைவில் அமைக்கப்படாவிட்டால் நாடு ஸ்தம்பிக்கும் - மத்திய வங்கியின் ஆளுநர் எச்சரிக...
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணமல்லா சலுகைகள் தொடர்பில் உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்த...
அழுத்தத்தை குறைக்கும் வகையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை அடுத்த வருடம் முதல் எளிமைப்படுத்தப்ப...


