யாழ் . குடாநாட்டு இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுக் கொடுக்கும் வகையில் தொழில் சந்தை நிகழ்வு
Friday, May 26th, 2017
மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் அனுசரணையுடன் நல்லூர் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொழில் சந்தை நிகழ்வு-2017 நாளை சனிக்கிழமை(27) நல்லூர் பிரதேச செயலக மண்டபத்தில் காலை-09 மணியளவில் நடைபெறவுள்ளது.
இதன் போது வேலைவாய்ப்பிற்கான நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது. ஆகவே, தொழில் வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் யாழ். குடாநாட்டைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் அனைவரையும் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு நல்லூர் பிரதேச செயலர் ஆழ்வார்பிள்ளை சிறீ தெரிவித்துள்ளார்.
Related posts:
மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய பல்கலைக்கழக நிர்வாகம் கூடும்!
இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16ஆம் திகதி!
கற்பிக்கும் ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே பரீட்சை தொடர்பில் இறுதித் தீர்மானம் – கல்வி அமைச்சு...
|
|
|


