மாமரத்திலிருந்து தவறி விழுந்த குடும்பஸ்தர் படுகாயம்
Monday, May 15th, 2017
வீட்டின் மாமரத்தில் மாங்காய் பிடுங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தரொருவர் மாமரத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார். .
குறித்த சம்பவம் சனிக்கிழமை(13) காலை-10 மணியளவில் யாழ். மீசாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மீசாலைப் பகுதியைச் சேர்ந்த செல்வராசா விஜயகுமார்(வயது- 50) என்ற குடும்பஸ்தரே படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குறித்த குடும்பஸ்தர் தற்போது மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாதிப்புக்குள்ளாகும் பெண்கள் குறித்து மனித உரிமைகள் நிலையம் ஆராய்வு!
இலங்கை கடவுச்சீட்டின் தரம் உயர்வு!
இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் முத்தையா சிவலிங்கம் காலமானார்!
|
|
|


