யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நால்வர் விடுதலை!
Thursday, May 11th, 2017
வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நால்வர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் கடந்த புதன்கிழமை( 10) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.பி பெரேராவினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வருடா வருடம் வெசாக், புத்தாண்டு போன்ற விசேட தினங்களில் ஜனாதிபதியின் பரிந்துரையின் அடிப்படையில் சிறுகுற்றம் புரிந்து நீதிமன்றங்களில் தண்டப்பணம் செலுத்த முடியாமல் தடுத்து வைக்கப்படும் கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழமை. வெசாக் தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் யாழ்.சிறைச்சாலையில் தண்டப்பணம் செலுத்த முடியாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகள் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி பிரச்சினை தொடர்பில் தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!
இந்தியாவிலிருந்து 146 அகதிகள் நாடு திரும்ப விருப்பம்!
பணிக்கு சமுகமளிக்காத ஊழியர்களின் வேலை மாத்திரமன்றி அவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் - ஜ...
|
|
|


