630 பாடசாலைகள் மீது சுகாதார வழக்கு !
Saturday, May 6th, 2017
சுகாதார அச்சுறுத்தல் காரணமாக மேல் மாகாணத்தின் 106 பாடசாலைகள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
பாடசாலைக் கட்டடங்களில் டெங்கு அச்சுறுத்தல் குறித்த ஆய்வொன்று கடந்த வாரம் நடைபெற்றது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் அறிவுறுத்தலின் பேரில் நடந்த இந்த ஆய்வு நடவடிக்கைகளில் சுகாதார அதிகாரிகள், முப்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன் கீழ், மேல் மாகாணத்தின் பாடசாலைகளுக்குச் சொந்தமான 10,089 கட்டடங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில், நுளம்பு அச்சுறுத்தல் காணப்பட்ட 630 பாடசாலைகளுக்கு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், 106 பாடசாலைகள் தண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ளன
Related posts:
வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு: நோயாளர்கள் பெரும் அவதி!
நாட்டில் கையிருப்பில் உள்ள அத்தியாவசிய உணவு பொருட்களின் தொகை குறித்து மதிப்பீடு - சந்தை, வணிக மற்றும...
சீரற்ற வானிலை - 3 மாவட்டங்களில் 1500 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலை...
|
|
|


