ஆசிரிய உதவியாளர்களின் கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பு!
Saturday, May 6th, 2017
ஆசிரிய உதவியாளா்களின் மாதாந்த கொடுப்பனவை 10 ஆயிரம் ரூபாவாக வழங்குவதற்கான சுற்று நிரூபங்கள் மாகாணங்களின் பிரதான செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளர் சுனில்ஹெட்டி ஆராச்சி கையொப்பமிட்ட சுற்று நிரூபங்கள் அனைத்து மாகாணங்களின் பிரதம செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இதுவரை 6 ஆயிரம் ரூபாவாக வழங்கப்பட்டுவந்த ஆசிரிய உதவியாளர்களுக்காக கொடுப்பனவு 4 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 10 ஆயிரம் ரூபாவாக வழங்கப்படவுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதமுதல் நிலுவையுடன் இந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்
Related posts:
இறப்பர் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் - விவசாயிகள்!
நிதி அமைச்சர் பசிலின் இந்தியாவுக்கான பயணம் இலங்கைக்கு முக்கியமானதாக அமையும் - அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்...
வடக்கில் பாடசாலை மாணவர்கள் கல்வியில் இருந்து இடைவிலகும் வீதம் அதிகரிப்பு - வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ...
|
|
|
6 இலட்சமாக காணப்பட்ட அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கை 15 இலட்சமாக அதிகரிப்பு - 199 அரச நிறுவனங்கள் பெர...
திருகோணஸ்வரத்தை தரிசித்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் – திருமலையில் State bank of india வி...
யாழ்ப்பாணத்தில் சர்வதேச புத்தக கண்காட்சி - திருவள்ளுவர் பண்பாட்டு மையத்திற்கு பார்வையாளர்களை அழைக்க...


