சஜீனுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்
Thursday, May 4th, 2017
மிகின் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றிய காலத்தில் அரசுக்கு சொந்தமான 883 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜீன் வாஸ் குணவர்த்தனவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடை நீதிமன்றத்தால் நீக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆடிகல இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 2007 – 2008ம் ஆண்டு காலப் பகுதியில் டென்டர் இன்றி சிங்கப்பூர் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தமையினூடாக மிஹின் லங்கா நிறுவனத்திற்கு பொருட்கள் கொள்வனவு செய்தமையால் அரசாங்கத்திற்கு நஸ்டம் ஏற்பட்டதாக கூறி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வரட்சியான காலநிலையால் நீர்நிலைகளின் நீர்மட்டம் வீழ்ச்சி!
யாழ் பண்ணைப் பகுதியில் எலும்புக்கூடு மீட்பு - தீவிர விசாரணையில் பொலிஸார்!
6 இலட்சமாக காணப்பட்ட அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கை 15 இலட்சமாக அதிகரிப்பு - 199 அரச நிறுவனங்கள் பெர...
|
|
|
யாழ் மாவட்ட வீட்டுத்திட்டம் தொடர்பான இறுதிப்பட்டியல் எதிர்வரும் 19 ஆம் திகதி வெளியிடப்படும் – மாவட்ட...
இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் ஒத்துழைப்புக்களை மேலும் மேம்படுத்த இந்திய உயர்ஸ்தானிகருடன் பிரதமர...
இந்தியாவுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இலங்கையை வேறொரு நாடு பயன்படுத்த இடமளியோம் - இராஜாங்க அமைச...


