அநியாயம் செய்தவர்களுக்கு தமிழ் ஊடகங்கள் துணை போகின்றன – புலம்புகிறார் சுமந்திரன்!
Tuesday, May 2nd, 2017
ஐ.நா சபை, சர்வதேசம், அமெரிக்கா உட்பட எவரும் எங்களைக் கைவிடாததால் ஈழத் தமிழர் அரசியல் இப்பொழுது திருப்பு முனையில் வந்து நிற்கிறது என்பதையிட்டு மகிழ்ச்சி கொள்ள முடிவதாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இப்பொழுது சில ஊடகங்கள் குறிப்பாக தமிழ் ஊடகங்கள் தேவையில்லாமல் இல்லாதது பொல்லாதது எல்லாவற்றையும் சொல்லி மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.பொய் புரட்டு உண்மையில்லாத சங்கதிகளையும் மக்களுக்குச் சொல்லி எமக்கு அநியாயம் புரிந்தவர்களுக்காக அவகாசம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்
தொடர்ச்சியாக இத்தகைய செய்திகளை அவர்கள் விசேடமாகத் தமிழ் ஊடகங்கள் செய்து துணைபோய்க் கொண்டிருக்கின்றன என தெரிவித்துள்ளார்.
Related posts:
வறட்சியின் தாக்கம்: வடக்கில் இலட்சக்கணக்கானோர் பாதிப்பு!
நாளை வெள்ளிக்கிழமை முன்னிரவு 8 மணிமுதல் மீண்டும் முடக்கப்படுகின்றது இலங்கை - ஜனாதிபதி செயலகம் அறிவிப...
அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டங்களுக்கே முன்னுரிமையளித்து வருகிறது - இராஜாங்க அமைச்சர் ஷாந...
|
|
|


