நாட்டில் மூன்று வெளிநாட்டுப் பிரஜைகள் உயிரிழப்பு!
Sunday, April 30th, 2017
சவுதிய அரேபியாவில் இருந்து இந்தோனேஷியா நோக்கி பயணித்த விமானத்தில் இருந்த பயணி ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக விமானத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கி நோயாளி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கும்போது உயிரிழந்துள்ளார்.
75 வயதுடைய இந்தோனேஷிய பிரஜை ஒருவரே உயிரிழந்துள்ளார். இதேவேளை ஹிக்கடுவை, நாலாகஸ்தெனிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த வௌிநாட்டு பிரஜை ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
73 வயதுடைய பிரித்தானிய பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தெமட்டகொடை, மஹவல ஒழுங்கை பிரதேசத்தில் வீதியில் விழுந்திருந்த 40 வயதுடைய சீனப் பிரஜை ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார்.
Related posts:
ஜனாதிபதி ஆலோசனை - எதிர்வரும் முதலாம் திகதியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்வு – இராணுவத் தளப...
வியாழன் அன்று அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் பிரதிநிதி நியமனம் - 120 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும்...
மாணவர் விசா கட்டணத்தை இருமடங்காக உயர்த்தியது அவுஸ்திரேலியா!
|
|
|


