நாட்டில் பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு வீதம் அதிகம்!
Sunday, March 26th, 2017
நாட்டில் வருடாந்த பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை குடும்ப அமைப்புச் சங்கத்தின் மருத்துவப் பணிப்பாளர் ஹரிஸ்சந்திர யகந்தாவல தெரிவித்துள்ளார்.
கருக்கலைப்பு காரணமாகவே தாய்மாரின் இறப்பு வீதத்தில் இலங்கை மூன்றாம் இடத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பற்ற பாலியல் தொடர்புகள் காரணமாக ஏற்படும் அவசியமற்ற கர்ப்பமடைதலே இந்த கருக்கலைப்புகள் அதிகரிக்க ஏதுவாக அமைந்துள்ளன. 35 வயதிற்கும் 50 வயதிற்கும் இடைப்பட்ட வயதுடைய பெண்கள் அதிகளவில் கருக்கலைப்பு செய்து கொள்வதாகவும் ஹரிஸ்சந்திர குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மருத்துவக் கல்லூரி இயங்காவிட்டால் இனி நிதி கிடையாது – வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சு அ...
ஏழு மாகாணங்களில் டெங்கு அதிக ஆபத்துள்ள வலயங்கள் அடையாளம் - தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிப...
நீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டணங்களில் மாற்றத்தை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி!
|
|
|


