யாழ். இந்துக் கல்லூரியின் முன்னாள் மாணவ தலைவர்களை ஒன்றிணைத்து முன்னாள் மாணவ முதல்வர் அமையம் உதயம்!
Thursday, March 16th, 2017
யாழ். இந்துக் கல்லூரியின் முன்னாள் மாணவ தலைவர்களை ஒன்றிணைத்து முன்னாள் மாணவ முதல்வர் அமையம் எனும் பேரில் புதிய அமைப்பொன்று உருவாக்கப்படவுள்ளதாக கல்லூரி அதிபர் ஐ. தயானந்தராஜா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய முன்னாள் மாணவ முதல்வருக்கான ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும்-19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-09 மணி முதல் கல்லூரியின் குமாரசாமி மண்டபத்தில் இடம்பெறும்.
இந்த நிகழ்வில் கல்லூரியின் முன்னாள் மாணவ முதல்வர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு கல்லூரி அதிபர் ஐ. தயானந்தராஜா கேட்டுள்ளார்.
Related posts:
தென்னை பயிர்ச்செய்கையை ஊக்குவிக்க தொழில்நுட்பப் பயிற்சி!
எதிர்வுகூறல்களை துல்லியமாக வழங்க மேலும் அதி நவீன வசதிகள் பெற்றுத்தரப்படும் - பாதுகாப்பு செயலாளர் தெ...
ஜனாதிபதியைச் சந்தித்தார் எகிப்து தூதுவர்!
|
|
|


