சோமு நவரட்ணத்திற்கு இறுதி அஞ்சலி!
Wednesday, March 9th, 2016
பிரபல வாகன திருத்துநரான காலஞ்சென்ற அமரர் சோமு நவரட்ணத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி.கிழக்கு மற்றும் வலி.தெற்கு முன்னாள் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர்கள் மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
புத்தூரைச் சேர்ந்த பிரபல வாகன திருத்துநரான சோமு நவரட்ணம் நேற்று (08) அமரத்துவமடைந்தார். இன்றையதினம் அன்னாரது இல்லத்திற்குச் சென்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார்.
அன்னாரது இறுதிக் கிரியைகள் இன்றையதினம் புத்தூரில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
குமார் குணரத்னத்திற்கு ஒரு வருட சிறை!
சித்திரவதைகளுக்கு எதிரான சாசனம் இலங்கையில் அமுகம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை - முன்னேற்றத்தை உன்னிப்பாக அவதானிகின்றதாம் அமெரிக்கா!
|
|
|


