பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 38 பேர் காயம்!
Saturday, March 4th, 2017
அநுராதபுரம் – பாதெனிய, மஹகல்கடவில பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் 38 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தின் போது காயமடைந்துள்ள 38 பேரும், கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், குறித்த 38 பேரில் 8 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.
Related posts:
வித்தியாவின் ஊரிலுள்ள குடும்பங்களின் விபரங்களை சமர்ப்பிக்குமாறு நீதிவான் பணிப்பு!
பிரான்ஸ் வீதி விபத்தில் யாழ்ப்பாண மாணவன் பலி!
மலேஷிய பிரதமருக்கு நல்லிணக்கம் குறித்து விளக்கம் கொடுத்தார் ஜனாதிபதி !
|
|
|


