14 இலட்சம் சிறுவர்கள் பட்டினியால் உயிரிழக்கலாம் – எச்சரிக்கிறது யுனிசெப்!
Thursday, February 23rd, 2017
உலகின் மிக வறுமையான நாடுகளான ஜேமன், நைஜீரியா, சோமாலியா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் 14 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பட்டினியால் உயிரிழக்கலாம் என்று யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
சுமார் 2 வருடங்களாக யுத்தம் நிலவும் ஜெமனில் 4 லட்சத்து 62 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறுவர்கள் போஷாக்கின்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவின் கிழக்கு பகுதியில் 4 இலட்சத்து 50 ஆயிரம் சிறுவர்கள் மந்த போஷாக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஜேமனில் கடுமையான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சேவ் த சில்றன் அமைப்பு இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
தொடர் கொலைகள் தொடர்பாக இதுவரை 5,000 பேர் கைது!
ஆளில்லா விமானம் ஏற்படுத்திய பரபரப்பால் அரை மணிநேரம் 30 மூடப்பட்ட துபாய் விமான நிலையம்!
5 தசாப்த பகைக்கு முற்றுப்புள்ளி: கியூபா – அமெரிக்கா இடையே ஒப்பந்தம்!
|
|
|


