பாதுகாப்புச் செயலர் கருணாசேனவுக்கு இருதய சத்திர சிகிச்சை!
Sunday, February 19th, 2017
இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சிக்கு இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றிலேயே கருணாசேன ஹெட்டியாராச்சிக்கு இருதய சத்திரசிகிச்சை வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது.
கருணாசேன ஹெட்டியாராச்சி மருத்துவ விடுப்பைப் பெற்றிருப்பதால், பாதுகாப்பு அமைச்சின் பதில் செயலராக முன்னாள் புத்தளம் மாவட்டச் செயலர் கிங்ஸ்லி பெர்னாண்டோ, நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

Related posts:
சாவகச்சேரி தற்கொலை அங்கி 10 வருடங்கள் பழமை வாய்ந்தது!
முள்ளிவாய்க்காலில் கரையொதுங்கிய மியன்மார் படகு திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை சென்றடைந்தது!
யாழ் மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பான முழுமையான விபரம்!
|
|
|


