2017 ஆம் ஆண்டு முதல் ஜீ.எம்.பி. சான்றிதழ் அவசியம்!
Sunday, February 19th, 2017
2017 ஆம் ஆண்டு முதல் உணவு தயாரிப்பு, விநியோக நிறுவனங்கள்,சுகாதாரத்துக்கு பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்திய ஜீ.எம்.பி. சான்றிதழ் பெற்றிருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கைக் கட்டளைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், தற்போது வரை அதற்கான விண்ணப்பங்கள் சுமார் 40 கிடைத்துள்ளதாகவும் அதில் 10 நிறுவனங்களுக்கு அந்த சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் டீ.ஜீ.ஜீ. தர்மவர்தன குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உணவு பாதுகாப்புக்கான எச்.ஏ.சி.சி.பி. சான்றிதழை பெற்றுள்ள நிறுவனங்கள்,ஜீ.எம்.பி. சான்றிதழை பெற்றுக் கொள்வது கட்டாயமில்லை என அவர் கூறியுள்ளார்.

Related posts:
இலங்கைக்கு 1340 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை கடன் வழங்க உலக வங்கி இணக்கம்!
குடாநாட்டு வெள்ளத்துக்கு தவறான வடிகாலமைப்பே காரணம் - அனர்த்த முகாமைத்துவ நிலையம்!
தீவகப்பகுதி குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் - வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்...
|
|
|


