போக்குவரத்தில் ஈடபடும் தவறுகள் தொடர்பில் அபராதத் தொகை அதிகரிப்பு!
Friday, February 17th, 2017
வரவு – செலவுத் திட்ட யோசனைக்கு அமைய, வாகனப் போக்குவரத்தில் ஏற்படும் பிரதான தவறுகள் 7இற்கான அபராதத் தொகை அதிகரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந் நிலையில், அபராதத்தை அதிகரிப்பது தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையின் ஊடாக, 30இற்கும் அதிக தவறுகளுக்கு அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சுயதொழிலாளர் முச்சக்கரவண்டி சங்கம் தெரிவித்துள்ளது.
நிதியமைச்சின் செயலாளர், போக்குவரத்து அமைச்சின் செயலாளர், நீதியமைச்சின் செயலாளர், மோட்டார் வாகன திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களப் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த ஆணைக்குழுவில் உள்ளதாக சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்..

Related posts:
மருத்துவ பீட மாணவர்கள் தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
அரச வைத்தியசாலைகளில் அவசரமற்ற சத்திரசிகிச்சைகளை ஒத்தி வைக்க தீர்மானம் - சுகாதார அமைச்சினால் அரசாங்க ...
5000 மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் - நாளைமுதல் விண்ணப்பம் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்...
|
|
|


