இலங்கையில் சுவீடன் தூதரகம் நிறுவப் பட வேண்டும் : சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்த யாழ். மாவட்டச் சிவில் சமூகப் பிரதிநிதிகள்

Wednesday, April 27th, 2016

இலங்கையில் சுவீடன் தூதரகம் நிறுவப் பட வேண்டுமென யாழ். மாவட்டச் சிவில் சமூகப் பிரதிநிதிகள் சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் .

இலங்கைக்கான சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கட் வோல்ஸ்டோம் அடங்கிய ஏழுபேர் கொண்ட குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இதன் ஒருகட்டமாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடனான சந்திப்பு நேற்று (26-) யாழ்.மாவட்டச்  செயலகத்தில்  இடம்பெற்றது .

இந்தச் சந்திப்பின் போது யாழ். மாவட்டத்தில் நிலவுகின்ற நீர்ப் பிரச்சினைகள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் என்பன தொடர்பாக சிவில் சமூகப் பிரதிநிதிகளால் சுட்டிக் காட்டப்பட்டது.அத்துடன் சிவில் அமைப்புக்களின் ஊடாக எதிர்காலத்தில் கொண்டு வரவுள்ள  மாற்றங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

சிவில் சமூகப் பிரதிநிதிகளின் கருத்துக்களைத் தான் பெறுமதி மிக்கதாகக் கவனத்திலெடுத்து தன்னால் முடிந்த நடவடிக்கைகளை எடுப்பதாக அவர்களிடம் உறுதியளித்தார்.

7f1893e5-c0ee-4908-867a-1013a9ef3764

Related posts:

அஜித் நிவாட் கப்ரால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா – ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு மீ...
வல்லையில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் கடற்படையினரால் சடலமாக மீட்பு!
கசப்பான மறக்க முடியாத அனுபவம் உள்ளதால் எதனையும் அலட்சியப்படுத்த முடியாது - தாக்குதல் நடத்தப்படவுள்ள...