பாதுகாப்பு சபையின் கண்டன அறிக்கையை நிராகரித்தது வடகொரியா!
Thursday, February 16th, 2017
வட கொரியாவின் அண்மைய ஏவுகணைச் சோதனை குறித்த ஐ.நா பொதுப் பாதுகாப்பு சபையின் கண்டன அறிக்கையை வட கொரிய வெளியுறவு அமைச்சு நிராகரித்துள்ளது.
வட கொரிய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளரை மேற்கோள்காட்டி நேற்று வட கொரிய அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
‘எமது அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகளுக்கு தடை என்ற ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானத்தினை நாம் எப்போதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம்’ என வட கொரிய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்புக்களையும் மீறி தொடர்ச்சியாக ஏவுகணைச் சோதனை நடத்திவரும் வட கொரியா இறுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை எவுகணை சோதனை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:
நைகரில் 50 மில்லியன் டொலரில் அமெரிக்க விமானத் தளம்!
கட்டாரிற்கு பயணித்த விமானமொன்று அவசரமாக கட்டுநாயக்கவில் தரையிறக்கம்..
சீனாவில் கடல் பனிக்கட்டியாகியதால் நடுக்கடலில் சிக்கி மக்கள் தவிப்பு!
|
|
|


