சவுதிக்கான இலங்கைத் தூதுவருக்கு மாரடைப்பு
Monday, February 6th, 2017
சவுதி அரேபியாவுக்கான இலங்கையின் தூதுவர் பைசர் மக்கீன் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வின்போதே அவருக்கு இந்த நிலை ஏற்பட்டது.
இந்தநிலையில் மன்னார் பைஸால் மருத்துவமனையில் அவருக்கு அவசர சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. சவுதிக்கான தூதுவராக 9 மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்படும் வரை அவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் சம்மேளன தலைவராக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
குவாம் தீவை தாக்குவதற்கான திட்டத்தை விலாவாரியாக அறிவித்த வடகொரியா!
ப்ரெக்சிட் விவகாரம்: முதலாவது முயற்சிலேயே தோல்வி!
எத்தியோப்பியாவில் கிளர்ச்சியாளர்கள் கோரூரம் - கிராமங்களுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு - 230 பேர் ...
|
|
|


