இலங்கைக்காக 125 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள இந்தியா!
Thursday, February 2nd, 2017
நிதி அமைச்சர் அருண் ஜெட்லியினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்திய மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்காக 125 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சிற்கு அரசாங்க வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக 14,798 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விடவும் இந்திய வெளிவிவகார அமைச்சிற்கு 135 கோடி ரூபா கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்துங்கள் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுர...
கோரத் தாண்டவம் ஆடும் கொரோனா- பிரான்சில் நேற்றைய நாளில் 2,886 பேர் பலி!
இராணுவங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா - அமெரிக்கா உறுதி!
|
|
|


