யாழில் இந்தியாவின் 68 ஆவது குடியரசு தின விழா விமரிசை!
Thursday, January 26th, 2017
இந்தியாவின் 68 ஆவது குடியரசு தின விழா இன்று வியாழக்கிழமை(26)காலையாழ். இந்தியன் இல்லத்தில் விமரிசையாக இடம்பெற்றது. விழாவில் யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் ஆ.நடராஜன் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலை மாணவ மாணவிகள்இ வட்டுக் கோட்டை இந்துக் கல்லூரி மாணவிகள் ஆகியோரின் கோலாட்டம்இ பார்வையற்ற முல்லைத்தீவு தேவிபுரம் இனிய வாழ்வு இல்ல மாணவ மாணவிகளின் குழுப்பாடலுடன் கூடிய குழுநடனம்இ வட்டுக் கோட்டை இந்துக் கல்லூரி மாணவர்களின் காவடியாட்டம் போன்ற பல்வேறு கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. தொடர்ந்து மக்கள் புலவன் மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேரன் பிரபல கர்நாடக சங்கீத வித்துவான் ராஜ்குமார் பாரதியின் விசேட உரையும் இடம்பெற்றது. விழாவில் பெருமளவானோர் பங்கு கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.


Related posts:
பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு முறைமைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் -சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவ...
இலங்கை மீது பல இராச்சியங்களின் கவனம் திரும்பியுள்ளது - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!
எதிர்வரும் 29 ஆம் திகதியும் மின்வெட்டு இல்லை - பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
|
|
|


