எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தல் இம்மாதம் வெளியிடப்படும்!

Tuesday, January 24th, 2017

உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இம்மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளதாக  உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

ஆத்துடன் இம்மாதம் 31ம் திகதியளவில் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு எதிர்பார்பார்க்கப்பட்டுள்ளது.  உள்ளுராட்சி மன்ற பிரதேசங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பிழைகளை திருத்துவதற்கு நியமிக்கப்பட்ட குழு குறிப்பிட்ட திருத்தங்களை தற்சமயம் மேற்கொண்டு வருவதாக திரு.பத்மசிறி தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் பரிந்துரைகளுக்கு அமைய உள்ளுராட்சி மன்ற சட்டமூலம் திருத்தியமைக்கப்படும். இதுவிடயம் தொடர்பான பிரேரணையின் பிரதியொன்று, தற்சமயம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் திரு.பத்மசிறி மேலும் தெரிவித்தார்.

1790674906provincemini

Related posts:

தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்துக்கு செல்லும் எண்ணம் இல்லை - பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!
இலங்கை கடல் எல்லையில் கடல்சார் எதிர்வுகூறல் கட்டமைப்பை அமைப்பதற்கு 5 இலட்சம் டொலர் பெறுமதியான முதலீட...
அரச வைத்தியசாலைகளில் கட்டாயமாக நோயாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் - வடக்கு மாகாண ஆளுநர் தி...