குளத்து நீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்து!
Monday, January 23rd, 2017
கிளிநொச்சி, அக்ராயன் குளத்து நீரை விவசாயிகள், சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று விவசாயத் திணைக்களமும், இந்தக் குளத்தின் கீழான விவசாய அமைப்புக்களும் வலியுறுத்தியுள்ளன.
அக்ராயன் குளத்தின் கீழ் சுமார் 4,500 ஏக்கரில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றுக்கு குளத்தில் இருந்து நீர்ப்பாசனம் செய்யப்படுகின்றது. குளத்தின் வலதுகரை வாய்க்கால் மூலம் நீவில் பகுதியில் உள்ள 1,200 ஏக்கர் வயல்களுக்கும் நீர்ப்பாசனம் செய்யப்படுகின்றது. இரணைமடுக் குளத்தின் கீழான பெரும் போகச் செய்கை வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய நீர்பாசனக் குளங்களில் இருந்து மிகுந்த திட்டமிடல்களுடன் நீர்ப்பாசனத் திணைக்களம் நீர் விநியோகம் மேற்கொண்டுள்ளது.

Related posts:
நவம்பர் முதலாம் திகதிமுதல் வற் வரி அமுலுக்கு வருகின்றது!
கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை !
ஜனாதிபதியிடம் தேர்தலுக்கு பணம் கோரி ஒரு மாதமாகியும் பதில் கிடைக்கவில்லை - தேர்தல்கள் ஆணைக்குழு கவலை!
|
|
|
40,000 மெட்ரிக் தொன் உரத்தை தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது - நாளைமுதல் நாடளாவிய ரீதியில் விநியோக...
அத்தியாவசியமான பகுதிகளுக்கு மாத்திரம் கால்நடை வைத்தியர்களை நியமிக்குமாறு கால்நடை வைத்தியர்கள் சங்கம்...
நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரிப்பு - இலங்கை சுற்றுலா அப...


