பாம்புகளை விட குதிரைகளே ஆபத்தானவை : புதிய ஆய்வில் தகவல்!
Monday, January 23rd, 2017
பாம்பு கடித்து இறப்பவர்களை விட, குதிரை தாக்கிக் கொல்லப்படுபவர்களே அதிகம் என அவுஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ரொனெல்லே வெல்டன், தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் வைத்தியசாலையில் பதிவான உயிரிழப்பு சம்பவங்களை ஆராய்ந்து குறித்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
குறித்த ஆய்வறிக்கையின் பிரகாரம் 13 ஆண்டுகளில் குதிரைகளால் 74 பேர் உயிரிழந்துள்ளனர். விஷப் பூச்சி கடிக்குள்ளாகி 27 பேரும், பாம்புகளினால் 27 பேரும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவுஸ்திரேலியாவில் விஷப் பூச்சிகளாலும் பாம்புகளாலும் அதிகமானோர் உயிரிழக்கிறார்கள் என கூறப்பட்ட நிலையில் குறித்த ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளதாக ரொனெல்லே வெல்டன் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
தாழ்வுப்பாடு கடலோரப் பகுதியில் கரையொதுங்கும் அரிய உயிரினம்!
அமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை!
zebronics 80 சென்றி மீற்றர் மானிட்டர் அறிமுகம்!
|
|
|


